|
மீன லக்னப் பலன்கள் - 2017-2018
ராசிபலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
.
சூரியன்
– வைகாசி மாதத்தில் உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும். மனைவியால் குடும்ப சுகம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து இறங்கும் மனோதைரியம் கூடும். அரசு மற்றும் மீடியாக்கள் மூலமாக சிறந்த சேவைக்காக சிறப்பான கௌரவங்கள் வந்து சேரும். ஆவணி மாதத்தில் பகைவர்களை வெல்வீர்கள். நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மார்கழி மாதத்தில் வெற்றி மேல் வெற்றிகள் குவியும், எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். நல்ல தோழமை கிடைக்கும். தை மாதத்தில் சூரியன் புதிய பதவி, கௌரவம் மற்றும் அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும்.
செவ்வாய்
– புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால், எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து, சுவைதரும் காலம் கண்ணுக்குத் தெரியும். சரியற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர். பொருளாதார உயர்வு ஏற்படும். பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். அதன் பிறகு தனதான்ய விருத்தி ஏற்படும். எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும். தகராறுகள், வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.
புதன்
– நீண்ட தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். புத்தாடை, புது ஆபரணங்கள் சேர்க்கை, ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அழகிய மக்கட்பேறு உருவாகும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம் செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும் பெருகும். சிலருக்குப் தகாத ஆசைகளும், கெட்ட சவகாசங்களும் ஏற்படும். எனவே, எச்சரிக்கை தேவை.
சுக்கிரன்
– புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டு, அவர்களால் உங்களுக்குப் பெருமை சேரும். தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள் ஏற்படும். உங்கள் கடமை தவறாத உணர்வால், உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உயர் வாகனாதிகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சுப காரியச்செலவுகள் கூடும். அச் சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சியும் கூடும். அதன் பின்னர் வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும். புண்ணிய யாத்திரைகள் மனஅமைதி தரும். புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
குரு
– ஆவணி 27 ஆம் நாள் குரு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். அதுவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதன் பிறகு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்குப் பின் வரும் காலங்களில்
சனி
– கர்ம பாவத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம். கடின உழைப்புக்கு எப்போதும் கட்டாயம் பலன் உண்டு. தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு. திருநள்ளாறு திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும். ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப்பிறவி. புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பிரபலமாகி, முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். உயரிய பதவிகள் தேடிவரும். மிகுந்த செல்வங்கள் சேரும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
பரிகாரம்:
:
திங்கள் கிழமை தோறும் அம்பாளை வழிபட்டுவர நன்மை பயக்கும். அத்துடன் திங்கள் கிழமை பள்ளிவாசல் சென்றுவர யோகங்கள் அதிகரிக்கும்.
|
|
|
|